Friday 3rd of May 2024 05:05:25 PM GMT

LANGUAGE - TAMIL
-
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அரசின்   நிதிநிலை அறிக்கை  தாக்கல்!

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல்!


இந்திய அரசின் 2021-2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

கொரோனா தொற்று நோய் நெருக்கடியின் மத்தியில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ள சூழலில் இந்த நிதிநிலை அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படுகிறது.

கோவிட்19 பெருந்தொற்றின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் நகர்த்தும் நோக்குடன் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நிதிநிலை அறிக்கை இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியா மத்திய அரசின் இன்றைய நிதிநிலை அறிக்கை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்திய வங்கிகளில் செயற்பாடுகளின்றி முடங்கியிருக்கும் சொத்துக்களின் 14 வீதமாக உயர்ந்துள்ள நிலையில் அவற்றை கையகப்படுத்துவதற்காக தனியான வங்கி (Bad Bank) உருவாக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொற்று நோய்க்கு மத்தியில் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு மற்றும் செலவீன அதிகாரிப்பு ஆகியவற்றை ஈடு செய்யும் வகையில் அதி வருமானம் பெறுவோருக்கான விரிகள் இந்த நிதிநிலை அறிக்கையில் அதிகரிக்கப்படலாம் என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

மேலும் நாட்டிலுள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்குவதற்கான நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். தடுப்பூசிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் அது மிகப் பெரிய விடயமாக இருக்கும் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE